நீலகிரியில் ஒரு லவ் ஜிஹாத்

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பள்ளிக்குச் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்த ஆஷிக் என்ற முஸ்லிம் இளைஞர், தான் மறைத்து வைத்திருந்தக் கத்தியை எடுத்து திடீரென மாணவியைக் குத்தினார். அலறித் துடித்த மாணவியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த இளைஞரை பிடித்துக் கட்டிவைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இந்த கொடூரச் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘குன்னூரைச் சேர்ந்த ஆஷிக், அந்த மாணவியை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அந்த மாணவி அதனை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிக், கத்தியை எடுத்துச் சென்று குத்தியுள்ளார். மாணவியின் மார்பு, வயிற்றுப்‌ பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஷிக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.