சி.ஏ.ஏ குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு

டெல்லியில் 2020ல் சி.ஏ.ஏவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத கலவரம் தொடர்பான ‘உபா’ வழக்கில் ஆர்.ஜே.டி இளைஞர் பிரிவு தலைவரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவருமான மீரான் ஹைதரின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்வழக்கு சம்பந்தமாக ஹைதர் ஏப்ரல் 1, 2020 அன்று கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஹைதரைத் தவிர, உமர் காலித், ஷர்ஜீல் இமாம், காலித் சைஃபி, முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன், பிஞ்சரா டோட் ஆர்வலர்கள் குல்பிஷா பாத்திமா, சஃபூரா சர்கார், நடாஷா நர்வால் மற்றும் நடாஷா நர்வால் ஆகியோர் மீதும் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.