எல்லை பகுதிகளில் சுற்றுலா

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, ‘எல்லை பகுதிகள் உட்பட நாட்டில் சுற்றுலாவை பல திட்டங்கள் மூலம் சுற்றுலாத்துறை அமைச்சகம் ஊக்குவிக்கிறது. சுதேஷ் தர்ஷன், பிரசாத் திட்டங்களின் கீழ் எல்லை பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்த நிதியுதவி வழங்குகிறது. விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து, பிராந்திய இணைப்பு திட்டம் மூன்றாவது உதான் திட்டத்தின் கீழ் சுற்றுலா வழித்தடங்களை மேம்படுத்த நிதியுதவி அளிக்கிறது. தேசிய நீர்வழித்தடங்களில் 9 இடங்களில் படகுத்துறை அமைக்க ரூ. 28 கோடி வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.