ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னையில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு தமிழக அரசின் மின்வாரியம் முறைகேடாக டெண்டர் ஒதுக்கியது தொடர்பாக ஆளுநரிடம் அண்ணாமலை மனு அளித்தார்.