ராகுலுக்கு மூக்குடைப்பு

பஞ்சாப் மாநிலத்தில் பொற்கோவிலிலும், கபூர்தலாவிலும் கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்துக்கொல்லும் சம்பவங்கள் சமீபத்தில் நடந்தன. இதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் ‘2014ம் ஆண்டுக்கு முன்பு, ‘கும்பல் கொலை’ என்ற வார்த்தையை யாரும் கேள்விப்பட்டது இல்லை. நன்றி மோடிஜி’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க, ‘‘சீக்கியர்கள் படுகொலையை நியாயப்படுத்திய ராஜீவ்காந்தியின் மகன்தான் ராகுல்காந்தி’’ என்று தெரிவித்தது. இதையடுத்து, டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்த பத்திரிகையாளர்கள், பா.ஜ.கவின் எதிர்கருத்து பற்றி கேட்டனர். இதனால் பதில் சொல்லத் தெரியாமல் வழக்கம்போல கோபம் அடைந்த ராகுல், ‘பா.ஜனதாவுக்காக மத்தியஸ்தம் செய்யாதீர்கள்’ என்று கூறினார். இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஏராளமான சீக்கியர்களை காங்கிரஸ்காரர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தனர். இதனை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும் இதனை கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி கொலைகாரர்களுக்கு அடைக்கலமும் பதவிகளும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.