ஹெச்.ராஜா கைது

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தி.க, எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ நபர்களை அழைத்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கருப்பு சட்டை வெள்ளை வேட்டியில் வரவழைத்து, அவர்களிடம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் காளிராஜ், பெண் விடுதலைக்கு ஈ.வெ.ராமசாமிதான் காரணம் என்று பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் எனது மனசாட்சி என்னை கருப்பு சட்டை உடுத்த சொன்னாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் அதை உடுத்திக் கொள்ளவில்லை என்று பேசியுள்ளார். இதையடுத்து துணைவேந்தரை ராஜினாமா செய்து விட்டு கருப்புசட்டை போட்டுகொள்ளுங்கள் என பேசிய பா.ஜ.க முன்னாள் தேசியசெயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஹெச்.ராஜா மற்றும் 1,000 பா.ஜ.க தொண்டர்களையும் கைது செய்துள்ளது தி.மு.க அரசு.