இதுதான் காவல்துறை நேர்மையா?

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் தனியார் பள்ளி முன்பு கூடிய 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட 5 கிறிஸ்தவ மிஷனரிகள் பள்ளியின் நுழைவாயில் முன்பு நின்று அங்கு பயிலும் மாணவ மாணவிகளிடம் கேக் மற்றும் புதிய ஏற்பாடு பைபிள் புத்தகத்தை கொடுத்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளும், மாணவர்களின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்தவ மிஷினரிகள் வந்த காரை முற்றுகையிட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மங்களராஜ் என்ற போதகர் மீது நடவடிக்கை எடுக்காமல், விஷ்வ ஹிந்து பரிஷத் துணைத் தலைவர் சின்ராசு, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் துறையினர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் கரூர் சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யாமல் ஹிந்து அமைப்பினர்களை கைது செய்து ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.