வி.ஹெச்.பி வரவேற்பு

முன்னாள் ஷியா வக்ஃப் வாரியத் தலைவராக இருந்த வசீம் ரிஸ்வி, சமீபத்தில் முஸ்லிம் மதத்தில் இருந்து விலகி தனது தாய் மதமான ஹிந்து தர்மத்தை ஏற்றுக்கொண்டார். ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். இந்நிலையில், லக்னோ பரண்டேவில் உள்ள ராம் லக்கன் பவனில் உள்ள வி.ஹெச்.பியின் மாநில அலுவலகத்தில், அவருக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மத்திய பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே உற்சாக வரவேற்பு அளித்து பேசுகையில், ‘தியாகி எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது, இந்த செயல், பலரையும் அவர்களின் மூதாதையர்கள் பின்பற்றிய தர்மமான ஹிந்து தர்மத்திற்கு திரும்ப ஊக்குவிக்கும். நமது தவறுகளைத் திருத்திக்கொண்டு, நமது வேர்களுக்குத் திரும்புவதுதான் மனித இயல்பு. தங்கள் முன்னோர்களின் தர்மத்தை ஏற்கத் தயாராக இருக்கும் எவரையும் வி.ஹெச்.பி வரவேற்கும்’ என்று உறுதியளித்தார்.