பா.ஜ.க எம்.பி., வீட்டருகே குண்டு வெடிப்பு

மேற்கு வங்க மாநிலம் பாரக்பூர் தொகுதியின் எம்.பி அர்ஜூன் சிங் பா.ஜ.கவை சேர்ந்தவர். கோல்கட்டாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள ஜகதால் பகுதியில் உள்ளது. நேற்று காலை 6:30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள், அர்ஜூன் சிங் வீட்டின் அருகில் 3 வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கதவு ஜன்னல்கள் லேசாக சேதம் அடைந்தன. இச்சம்பவம் தொடர்பாக தகவல் வந்ததால் டெல்லியில் இருந்து உடனடியாக சொந்த ஊர் திரும்பினார் அர்ஜூன் சிங். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கார், ‘மேற்கு வங்கத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் குறைவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.இந்த வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்’ என்றார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் இந்த சம்பவத்திற்கு என பா.ஜ.க மாநிலத் தலைவர் திலீப் கோஷ் குற்றம் சாட்டினார்.