அன்சார் கான் நிரபராதி

சி.ஏ.ஏ தொடர்பாக டெல்லியில் முஸ்லிம்கள் நடத்திய வன்முறை கலவர வழக்கில் அன்சார் கான் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அவர் தான் நிரபராதி என சத்தியம் செய்தார். இதனால், சந்தேகம் கொண்ட டி.சி.பி பிரமோத் குஷ்வாஹாவின் உத்தரவின் பேரில் காவல்துறை அவ்வழக்கை புலனாய்வு செய்தது. அதில் கானின் பக்கத்து வீட்டுக்காரரான முஜம்மில் அல்வி என்பவர், பெண்களை கொடுமை உள்ளிட்ட பல்வேறு தவறுகளை செய்துவந்தார். இந்த குற்றச்சாடுகளை விசாரிக்க வேண்டும் என ஜமாத்தில் கான் புகார் அளித்துள்ளார். இதற்கு பழி வாங்கும் விதமாகவே அல்வி வெடிகுண்டை தன் வீட்டில் தயாரித்து கானின் வீட்டில் வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. விசாரணையில் முஜம்மில் அல்வியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அன்சார் கான் நிரபராதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.