ஜார்க்கண்டில் நீதிபதி கொலை

ஜார்க்கண்டில் உள்ள தன்பாத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை (ஜூலை 28) அதிகாலை தனது நடைப்பயணத்திற்கு வெளியே வந்தபோது வாகனத்தில் அடிபட்டு இறந்தார். முன்னதாக, இது சாலை விபத்து என்று நம்பப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தபோது, ஆட்டோ ஒன்று அவரை மோதிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் ஒரு கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வழக்கை காவல்துறை விசாரித்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எஸ்.டி.பி தனபாத் சஞ்சீவ் குமார் தெரிவித்தார். இந்த நிலையில், இது குறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.