அயோத்தி ராமேஸ்வரம் விமான சேவை

ராமேஸ்வரம் வந்த உத்தர பிரதேச போக்குவரத்துத் துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா, சுவாமி தரிசனத்துக்கு பின், ‘உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வரானது முதல் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உ.பி., வளர்ச்சி பாதையில் செல்கிறது. இதனால் மக்களும் பொருளாதார ரீதியாக மேம்பட்டு உள்ளனர். அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானம் முடிந்ததும், மத்திய அரசுடன் ஆலோசித்து, ராமாயணத்துடன் தொடர்புடைய அயோத்தி – ராமேஸ்வரம் இடையே, விமான போக்குவரத்து துவக்கப்படும். அடுத்தாண்டு உ.பியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.க 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்’ என்று கூறினார்.