தாக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகள்

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் ராஜஸ்தானை சேர்ந்த வேலையில்லாத பல கணினி பட்டதாரிகள், கடந்த சனிக்கிழமையன்று, உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் அலுவலகத்திற்கு சென்றனர். பிரியங்காவை சந்தித்து வேலை தொடர்பான கோரிக்கையை வைக்க முயற்சித்தனர். பிரியங்காவை சந்திக்க முடியாத்தால் அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள், இந்த பட்டதாரிகளை கடுமையாகத் தாக்கி, விரட்டினர். இதனால், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.