முன்னாள் காவல் அதிகாரி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரியான பயஸ் அகமது, அவரது மனைவி ராஜ பேகம் ஆகியோரை, பயங்கரவாதிகள் வீடு புகுந்து சுட்டுக் கொன்றனர். படுகாயமடைந்த காவல் அதிகாரியின் மகள் ரஃபியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். ஜம்மு விமானப்படை தளத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில் முன்னாள் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமானப்படை தள வெடிகுண்டு தாக்குதலுக்கும் இச்சம்பவத்திற்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.