மெஹுல் சோக்சி திருப்பியனுப்ப உறுதி

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடி மோசடி செய்து, பா.ஜ.க ஆட்சியில் கைது செய்யப்படுவோம் என அறிந்த உடன் ஆன்டிகுவாவுக்கு தப்பிச்சென்ற மெஹுல் சோக்சி அங்கிருந்து சில நாட்கள் முன்பு காணாமல் போனார். அது குறித்து ஆன்டிகுவா & பார்புடா பிரதமர்  காஸ்டன் பிரவுன் ஏ.என்.ஐக்கு அளித்த ஒரு பிரத்யேக பேட்டியில், ஆன்டிகுவா அவரை திரும்ப ஏற்றுக்கொள்ளாது. மீண்டும் அவர் இங்கு வந்தால் பாரத்த்துக்கு திருப்பி அனுப்ப உறுதி அளிக்கிறேன் என கூறியுள்ளார்.