எங்களுக்கு என்ன மிஞ்சியது?

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், கபில் சிபல் என அனைவரும் மேற்கு வங்கத்தில் திருணமூல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில்,  காங்கிரசின் மற்றொரு மூத்த தலைவரான ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, ‘முஸ்லீம் வாக்குகள் திருணமூல் கட்சிக்கும், ஹிந்து ஓட்டுகள் பா.ஜ.கவுக்கும் சென்றுள்ளன. எங்களுக்கு எதுவும் மிச்சமில்லை. இது ஒரு அவமானகரமான தோல்வி. எந்தவொரு பிரகாசமான வாய்ப்பும் தற்போது எங்களுக்கு இல்லை. எனவே, காங்கிரஸ் டிவிட்டர், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்களில் இருந்து வெளியேறி உண்மை உலகிற்கு வரவேண்டும். பொது மக்களுக்கு ஆதரவாக தெருக்களில் இறங்க வேண்டும். இல்லையெனில் உள்ளதும் பறிபோகும்’ என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.