40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

கொரோனா தொற்று வேகமாக உயர்ந்து வருவது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு வழக்கறிஞர், ‘கடந்த ஆண்டை விட தொற்று பரவல் மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறிச் சென்று விட்டது. தமிழகத்தில் போதிய அளவில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது. எனவே, 40 வயதானவர்களுக்கும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.