இங்கிதம் இல்லாத மமதா

சுபாஷ் சந்திரபோஸின், 125வது பிறந்த நாள் விழா, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் கலந்து கொண்டார். மமதா பேச ஆரம்பிக்கும்போது, கூட்டத்தில் இருந்த சிலர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என, கோஷமிட்டனர். இதனால், மமதா கோபம் அடைந்தார். ‘இது அரசு விழா; கட்சி விழா அல்ல. இது என்னை அவமதிப்பதாக உள்ளது. அதனால், பேச மாட்டேன்’ என கூறி அங்கிருந்து வெளியேறினார். ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தை எதிர்த்துள்ள மமதா, அதே மேடையில், ‘ஜோய் பங்களா’ என்ற கோஷத்தை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி பேசிய போதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பப்பட்டது. மமதாவின் இந்த செயலுக்கு தேசம் முழுதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.