தாக்கப்பட்ட சுவேந்து அதிகாரி

சமீபத்தில் மமதாவின் திருணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.கவில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் மேற்கு வங்கம், தெங்கா பகுதியில் உள்ள ஜானகிநாத் கோயிலுக்கு சென்றார். அப்போது வழியில் நந்திகிராம் பகுதியில் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் அவரது வாகனத்தின் மீது கல்லெறிந்து தாக்கினர். இதில் சுவேந்து அதிகாரியுடன் பயணித்த  பா.ஜ.க எம்.பி   அர்ஜுன் சிங், பா.ஜ.க   தொண்டர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இதை கண்டித்துள்ள பா.ஜ.க, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என கூறியுள்ளது.