தலைவர்களை கொல்ல சதி

தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான சோட்டா ஷகீலின் கூலிப்படையை சேர்ந்த இலியாஸ் ஷேக் நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பின் கைது செய்யப்பட்டான். இவன் தூரத்தில் இருந்து சுடும் ஸ்னைப்பர் வகை துப்பாகிகளை கையாள தெரிந்தவன். இவனை குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கலை கொல்ல அவன் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவனது லிஸ்டில் காங்கிரஸின் புதிய கூட்டாளியான சிவசேனை தலைவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவோ, சிவசேனையோ இரண்டையும் ஒரே தூரத்தில் வைத்துதான் முஸ்லிம்கள் பார்க்கின்றனர் என சிவசேனை தலைவர்களுக்கு இன்னமும் புரியவில்லை.