விமானப்படையில் 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்திய முப்படைகளில், இளைஞர்களை சேர்க்க, ‘அக்னிபத்’ திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கான வயது வரம்பு 17.5 முதல் 21. எனினும், கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் தேர்வு நடக்காத காரணத்தினால், இவ்வாண்டு உச்ச வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை இந்திய விமானப்படை கடந்த 24ம் தேதி துவக்கியது. ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். விமானப்படையில் அக்னிவீரர்களாக சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், சாதனை அளவாக 7,49,899 பேர் அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர விண்ணப்பித்துள்ளனர். கடந்த காலங்களில் விமானப்படையில் சேர்வதற்கு வந்த விண்ணப்பங்களில் அதிகபட்சமாக 6,31,528 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.