வேலைக்கே போகாமல் 4.8 கோடி சம்பளம்

இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005ல் பணியில் இணைந்த ஒரு ஊழியர் சில மாதங்களில் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். எனினும் அவருக்கு கடந்த 15 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4.8 கோடி ரூபாய். சியாசியோ அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் மேலாளர்களிடம், அந்த ஊழியர் பணிக்கு வராமல் இருந்ததைக் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு அவர் பணிக்கு வராமல் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தது, மோசடி, ஏமாற்றுதல், அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார் என இத்தாலிய செய்தி நிறுவனமான ஹன்சா கூறுகிறது. தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என தன் முன்னாள் மேலாலரை மிரட்டியதாகவும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என காவல் துறை கூறியுள்ளது. தொடக்கத்தில் இருந்த மேலாளர் பணி ஓய்வு பெற்ற பிறகு, அடுத்தடுத்து வந்தவர்களின் கவனத்துக்கோ, மனித வளத் துறை உட்பட எந்த துறையினர் கவனத்துக்கும் இப்படி ஒரு நபர் வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் செய்தி செல்லவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.