2 ஓட்டு போட்ட காங்., நிர்வாகி பா.ஜ.,வினர் போலீசில் புகார் 2 ஓட்டு பா.ஜ., புகார்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி நடுப்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். காங்., மாவட்ட நிர்வாகி. இவருக்கு, இரு இடங்களில் ஓட்டு இருந்துள்ளது. நேற்று காலை, நடுப்பட்டி பகுதியில் உள்ள, 84வது எண் பூத்தில், தன் ஓட்டை பதிவு செய்துள்ளார். பின், நடுப்பட்டிக்கு சென்று, ஓட்டு போட்டுள்ளார்.

ஏற்கனவே ஓட்டு போட்டதற்கு விரலில் மை இருந்த நிலையில், பூத் ஏஜன்டுகள், அவர் மற்றொரு ஓட்டு போட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர், கோபாலகிருஷ்ணனை, இரண்டாவது ஓட்டுப்போட அனுமதித்துள்ளார். இதை அப்பகுதி பா.ஜ.,வினர் கண்டுபிடித்து, ஆதாரத்துடன், வையம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.