ஹிந்து பெண்கள் கடத்தப்பட்டு முஸ்லிம்  மதத்திற்கு கட்டாய மதமாற்றம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் கடத்தப்பட்டு, முஸ்லிம் மதத்திற்கு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக, அவரது குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், பாகிஸ்தானின் வடக்கு சிந்து மாகாணத்தில், முதலாமாண்டு மருத்துவ மாணவி நம்ரிதா சந்தானி, மர்மமான முறையில், அவரது அறையில் இறந்து கிடந்தார். இதை தற்கொலை என, போலீசார் தெரிவிக்க, நம்ரிதா கொலை செய்யப்பட்டார் என அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர். நம்ரிதா, முஸ்லிம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பாகிஸ்தானில் வசிக்கும், ஹிந்து, சீக்கியர் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்கள், கடத்தப்பட்டு, முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்து, கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.