ஹிந்து ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

துறையூர், கண்ணனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் கருவறைக்குள் அர்ச்சகர் ஓம்பிரகாஷை, திமுக பிரமுகர் லெனின் தாக்கினார். இவரின் மனைவி பேபி, திமுக ஒன்றிய கவுன்சிலர்.

இந்த அராஜக செயல், பொதுமக்கள் மத்தியில் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, கோயில் பரம்பரை அறங்காவலாக இருந்த திமுக பிரமுகர் லெனின் தந்தை காசிராஜனையும், ராஜேந்திரன் என்பவரையும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஹிந்துக்கள் ஒன்றுபட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.