ஹனுமன் சிலை பாறைக்கு பூஜை

அயோத்தி ராமர் கோவிலின், பால ராமர் சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்து உள்ளார். இந்த சிலையை வடிவமைக்க மைசூரின் ஹரோஹள்ளி என்ற இடத்தில் இருந்து, பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இந்த பாறையின் எஞ்சிய பகுதி, மைசூரில் இருந்து கொப்பாலுக்கு எடுத்து வரப்பட்டு உள்ளது.

எஞ்சிய பாறையில் ஹனுமனுக்கு சிலை செய்யும் பணி நேற்று துவங்கியது. கொப்பாலை சேர்ந்த சிற்பி பிரகாஷ், ஹனுமன் சிலையை வடிவமைக்க உள்ளார். எஞ்சிய பாறைக்கு நேற்று பூஜை செய்யப்பட்டது.