வெளிநாட்டுப் பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை திரும்பினார்.
அமெரிக்கா பிரிட்டன் மற்றும் துபாய் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து மொத்தம் ரூபாய் 8255 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலம் 35 ஆயிரத்து 520 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அவற்றை இங்கு நடைமுறைப்படுத்த போடுவதன் மூலம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை தொடர்ந்து திகழ  வைக்க முடியும் என்று உறுதி அளித்தார் முதல்வர் பழனிசாமி