வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிக பட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 -28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.