விநாயகர் சிலை உடைப்பு

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள மந்திரமூர்த்தி ஆலயம் எனும் விநாயகர் கோயிலில், விநாயகர் சிலையை சில மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதையடுத்து இந்துமுன்னணி அமைப்பினர், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் அந்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். சமீப காலமாக, தமிழகத்தில் தொடர்ந்து இதுபோன்ற சிலையுடைப்பு, துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்த காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.