சர்ச்சை பேனர் வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்த பிரதீஷ் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து அவரது நண்பர்கள் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். அதில் இறைவன் சிவன் சிகரெட் புகைப்பது போன்ற படம் இருந்தது. இதற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரணியல் காவல்துறையினர் அதனை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாப்பிள்ளையின் தம்பி மணிகண்டன், அவரது நண்பர்கள் சேகர், ரஞ்சித், சுபின் ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.