விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு: ஒரு வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே

ஆக்.,22ம் தேதி முதல் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படு உள்ளது. இந்நிலையில், விழாவை எப்போதும் சிறப்பாக கொண்டாடும் மும்பையில், ‘ஒரு வார்டு; ஒரு சிலை’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மும்பை மாநகராட்சியின் உதவி கமிஷனர் கூறியதாவது: மும்பையில் ஒரு வார்டில் ஒரு சிலை வீதம் நிறுவி கொள்ளலாம். விநாயகரின் சிலைகள், 4 அடிக்குள் இருக்க வேண்டும். இந்த விநாயகர்களை விசர்ஜனம் செய்ய, செயற்கை நீர்நிலைகள் ஏற்படுத்தப்படும். அங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அங்கு மட்டுமே சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.