விண்வெளித்துறையில் நேரடிமுதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விண்வெளித்துறையில் நேரடி முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று இரவு பிரதமர் தலைமையில் கூடியது, இதில் மத்திய அமைச்சர்கள், மற்றும் மத்திய இணை அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியது, விண்வெளித்துறையில் நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கரும்புக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ. 315-லிருந்து 340 வரை உயர்த்திடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். விவசாயிகளின் நலனில் எப்போதும் பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடன் செயல்படுவார் . இவ்வாறு அவர் கூறினார்.