விஜயபாஸ்கரின் விவரங்கெட்ட பேச்சு

புதுக்கோட்டையில் எஸ்.எப்.எஸ். என்ற கிறிஸ்தவ பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களில் மட்டுமே கல்வியோடு ஒழுக்கமும் கற்றுத் தருகிறார்கள்” என்று பேசியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

கிறிஸ்தவ பள்ளிக் கூடங்களில் 90 சதவீதம் ஹிந்து குழந்தைகள் தான் படிக்கிறார்கள். ஆனாலும் காலை வழிபாட்டில் கிறிஸ்தவ வழிபாடு மட்டுமே உண்து. இது அநியாயம். நன்னெறி வகுப்பு (Moral Class)களில் கிறிஸ்தவ மதம் பற்றி கூறி மூளைச் சலவை செய்யப்படுகிறது.

சேலத்தில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் பல வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. மறுநாள் சதுர்த்தி அன்று பள்ளிக்கு வராத 10வது, 12வது வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு முழங்கால் முட்டி போட வைத்து தண்டனை அளித்தார்கள். இது தெரிந்து பெற்றோர்கள் கேட்டபோது ஆம், எங்கள் பள்ளியின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டால் உங்களின் குழந்தைகளை இங்கு படிக்க வையுங்கள். இல்லையென்றால் உங்கள் விருப்பமான பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று திமிர்த்தனமாக பதில் அளித்தனர். பல கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஹிந்து பெண் குழந்தைகள் பூ வைக்கவோ, பொட்டு வைக்கவோ அனுமதிப்பதில்லை. மாணவர்கள் கையில் காசிக் கயிறு, ரக்ஷாபந்தன் கயிறு கட்டியிருந்தால் அது கூட கிறிஸ்தவ ஆசிரியர்களுக்குப் பொறுக்காது.

கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிக்கூட விடுதிகளில், மாணவ மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பல பாதிரிகளைப் பற்றி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கண்பார்வையில்லாத பெண்கள் தங்கி படிக்கும்  விடுதிகளில் கூட தவறாக நடந்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. இத்தகைய நிலையில் கிறிஸ்தவ பள்ளிக் கூடங்கள் மட்டுமே ஒழுக்கத்தை போதிக்கிறது என்பது அபத்தமானது. கிறிஸ்தவ பள்ளிகள் தொண்டு, சேவை என்ற நோக்கத்திற்காக நடத்தப்பட்டு வரவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் மதமாற்றமே!

ஸ்ரீராமகிருஷ்ண மிஷன், சத்யசாய் பாபா, வித்யாபாரதி போன்ற எண்ணற்ற ஹிந்து தொண்டு நிறுவனப் பள்ளிக் கூடங்களில் அருமையான ஒழுக்கத்தோடு கூடிய கல்வி கற்றுக் கொடுப்பது  தெரியாதது போல இப்படி அமைச்சர் பேசக்கூடாது.

 

 

One thought on “விஜயபாஸ்கரின் விவரங்கெட்ட பேச்சு

  1. விஜய பாஸ்கரின் விமர்சனம் மறக்க முடியாது, மன்னிக்க கூடாதது, கண்டிக்க வேண்டியது. அரசியல்வாதிகள் எது வேண்டுமானாலும் பிதற்றி விடாலாம் , யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற திமுறு . இவர்களை முதலில் , கோவில் இருந்து அகற்ற பட வேண்டும். கோவில் பணத்தை சூறை ஆடும் இந்த கூட்டங்களை களைந்து ஏறிய வேண்டும்.

Comments are closed.