விசாரிக்கும் பா.ஜ.க குழு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூய இருதய மேல்நிலை பள்ளி நிர்வாகத்தால் மதமாற்ற அழுத்தம் காரணமாக சில நாட்களுக்கு முன்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த தேசிய பா.ஜ.க சார்பாக 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தியா ரே, எம்.பி, தெலங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் வாக், கர்நாடகாவை சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். சம்பவ இடத்தில் நேரடியாக இவர்கள் விசாரணை நடத்தி, அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.