வாகனப்பயணம் நிறைவு

பாரதத்தின் 75வது சுதந்திர ஆண்டை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பி.ஆர்.ஓ எனப்படும் எல்லையோர சாலைகள் அமைப்பினரின் இருசக்கர வாகன பயணம் சிலிகுரியில் இரண்டாம் கட்டத்தை நிறைவடைந்தது. எல்லையோர சாலைகள் அமைப்பு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு கடந்த அக்டோபர் 24 முதல் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் அஸ்ஸாம் வழியாக 11 நாட்களில் சுமார் 3,000 கிமீ பயணத்தை மேற்கொண்டனர். ஸ்ரீநகர், ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்களும் இவர்களால் நடத்தப்பட்டது. இதில், 800க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர். மேலும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள், சுகாதாரத்தை பராமரிப்பு, கொரோனா விழிப்புணர்வு உள்ளிட்ட முகாம்களும் இவர்களால் நடத்தப்பட்டது.