வயநாடு வெற்றிக்கு பின் அமேதி மக்களை கைவிட்ட ராகுல்: ஸ்மிருதி இரானி

‘வயநாட்டில் வெற்றி பெற்ற பின், அமேதி மக்களை ராகுல் கைவிட்டு விட்டார்’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

ராமநவமியை முன்னிட்டு, எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஸ்மிருதி இரானி கூறியிருப்பதாவது: ராகுல் சனாதனத்திற்கு எதிரானவர். ராமர் இல்லை எனக் கூறிய ராகுல் ராம நவமியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டில் வெற்றி பெற்ற பின், அமேதி மக்களை ராகுல் கைவிட்டு விட்டார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை ராகுல் நிராகரித்தது வருத்தமான விஷயம். கடவுளை நிராகரிப்பவருக்கு என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.