லாசரஸ்கள் கவ்வ வேண்டியது மண்

‘‘இன்று தமிழகத்தில் 60 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் இருக்கிறோம். இதில் ஒவ்வொருவரும் ஒரு புதிய
ஆத்மாவை நமது சபைக்கு அழைத்து வந்தால் (மதமாற்றம்) வருகிற ஆண்டு நமது எண்ணிக்கை 1.2 கோடியாக உயரும். இப்படியே மூன்று ஆண்டுகள் தொடர்ந்தால் நாம் தமிழகத்தை அசைத்துப் பார்த்து விடலாம்’ – என்று
கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலு மாவடி எனும் ஊரில் நடைபெற்ற
இயேசு விடுவிக்கிறார் என்ற கூட்டத்தில் பேசியுள்ளார். தமிழகத்தை அசைத்துப் பார்த்து விடலாம் என்றால்
தமிழகத்தை ஒரு கிறிஸ்தவ மாநிலமாக மாற்றிவிடலாம் என்பதை பட்டவர்த்தனமாக பேசியுள்ளார்.
இவர் முன்பு ஒரு கூட்டத்தில் ஹிந்து கோயில்கள் சாத்தான்களின் உறைவிடம், இந்தியாவிலேயே அதிக சாத்தான்கள் உள்ள இடம் தமிழகம்தான்'' என்றெல்லாம்
பேசியிருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை அன்று நாலு மாவடியில் இயேசு விடுவிக்கிறார் என்று ஜபக் கூட்டம்
நடத்தி வருகிறார். அதில் ‘‘இயேசுவை ஜபித்தால் குருடர்கள் கண்பார்வை பெறுகிறார்கள், – செவிடர்கள் காது
கேட்கிறார்கள் – முடவர்கள் நடக்கிறார்கள்’’ என்றெல்லாம் கூறி அப்பாவி ஜனங்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி வருகிறார். மற்றவர்களுக்கு ஜபித்தால் குணமாகும் என்று பிரச்சாரம் செய்கிற இவர்கள் தங்களுக்கு நோய் வந்தால் பிரபல மருத்துவ மனைகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று சிகிச்சை பெறுகிறார்கள்.
இவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் மதம் மாற்றும் கேந்திரங்களாக செயல்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்தவ மயமாகிவிட்டது. அடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி
மாவட்டங்கள் குறிவைக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் மதம் மாற்றம் தீவிரமாக நடைபெற்று
வருகிறது. ‘‘ஒருவன் மதம் மாற்றப்பட்டால் ஹிந்துவின் ஜனத்தொகையில் ஒன்று குறைகிறது என்பது மட்டுமல்ல,

நமது எதிரிகளின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு. தமிழக அரசே

உஷார்…! உஷார்…!

தலையங்கம் பற்றி உரையாற்றுகிறார் விஜயபாரதம் ஆசிரியர் ம.வீரபாகு