ரொட்டியின் சுவை

பள்ளியில் ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வியை மாணவர்களிடம் கேட்டார்.

“ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?”

“வெண்ணெயை தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்றான் ஒரு மாணவன்.

“ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்” என்றான் இன்னொரு மாணவன்.

“பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”, “தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”, “பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”… என மாணவர்கள் ஆளுக்கொரு கருத்துகளைச் சொன்னார்கள். இறுதியாக ஒரு மாணவி எழுந்து, “ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான் மிகவும் சுவையாக இருக்கும்” என்று கூறினாள்.

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து, அந்த மாணவியை பாராட்டினார். மாணவ மாணவிகளும்  கரவொலி எழுப்பி பாராட்டினர். கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது.