ராம் சிங் ஆன அலி அக்பர்

பிரபல மலையாள இயக்குநர் அலி அக்பர், தன்னுடைய முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழகத்தின் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்திற்கு தேசமே அஞ்சலி செலுத்தி வருகிறது. அதேவேளையில், ஒருசில விஷமிகள் பிபின் ராவத்தின் இறப்பு சம்பவத்தை வைத்து கண்டிக்கத்தக்க வகையிலான பதிவுகளை வெளியிடுகின்றனர். இதனை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டதற்காக எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஒப்புக்கொள்ளவும் முடியாது. எந்த ஆடையுடன் நான் பிறந்தேனோ அதனை துறக்கிறேன். இனி நானும் என் குடும்பத்தாரும் பாரதியர்கள். அதுதான் எங்களின் முடிவு. இனி நான் ‘அலி அக்பர் ராம்சிங்’ என்று அழைக்கப்படுவேன். இதுதான் சிறந்த பெயர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.