ராமர் சிலை சேதம்

ஆந்திரா, விஜயநகரம் மாவட்டம், ராமதீர்த்தத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ராமர் கோயிலில் சில சமூக விரோதிகள் புகுந்து ராமர் சிலையின் தலையை துண்டித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்தவரான அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹிந்துக்களை பாரபட்சமாக நடத்துகிறார் என மக்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.