ராமருக்கு கோரக்நாதரின் பங்களிப்பு

ஸ்ரீராம ஜென்மபூமியில் ஆலயம் அமைப்பதற்கு பங்களிப்பாக, உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்ரீ கோரக்நாதர் கோயில் சார்பாக ரூ.1 கோடியே 1 லட்சம் காசோலையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்ரீராம ஜென்மபூமி நிர்மான் நிதிக்குதீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் வழங்கினார். ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் அமைவதற்காக கோரக்பூரில் வசிக்கும் மக்களும் தாராளமாக நிதி வழங்கினர். மேலும், உ.பி முதல்வர் தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து இரண்டு தவணையாக ரூ. 2 லட்சம், ரூ. 11 லட்சம் நன்கொடை அளித்திருந்தார்.