ராணுவ வீரர்கள் எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளனர் – ராணுவ தளபதி நரவனே

சீனா அத்துமீறல் காரணமாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, லே பகுதிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

நமது வீரர்கள் மன உறுதியுடன் உள்ளனர். அவர்கள் எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளனர். எல்லையில் பதற்றம் சிறிது பதற்றமாக தான் உள்ளது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நமது பாதுகாப்புக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நமது பாதுகாப்பு மற்றும் இறையாண்மை பாதுகாப்புடன் உள்ளது. நமது வீரர்கள் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் மன உறுதியுடன் உள்ளதால், எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளனர். நமது அதிகாரிகளும், வீரர்களும் உலகளவில் சிறந்தவர்கள். அவர்கள் ராணுவத்தை மட்டுமல்லாமல், நாட்டையும் பெருமையடைய வைப்பார்கள்.