ராணுவ வீரர்களுக்கு ஏ.பி.வி.பி அஞ்சலி

நெல்லை மாவட்ட ஏ.பி.வி.பி சார்பாக, காஷ்மீரில் கடந்த 20 ஏப்ரலில் மாலை 3மணி அளவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இன்னுயிரை நீத்த பாரத ராணுவத்தின் ராஷ்டிரிய ரைஃபில் படைவீரர்கள் ஐந்து பேருக்கும் வீர அஞ்சலியும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கண்டித்து வீர முழக்கமிட்டு வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென் தமிழக மாநில இணைச் செயலாளர் சூர்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்ட பலரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.