ராகுலுக்கு இது தெரியுமா?

மத்தியபிரதேச உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா போபாலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர், விவசாய சட்டத்தை திரித்துக்கூறி விவசாயிகளை குழப்பும் ராகுலுக்கு உருளைகிழங்கு மண்ணுக்கு மேல் விளையுமா அல்லது கீழே விளையுமா என்பதுகூட தெரியாது. டிராக்டரில் குஷன் சோபா போட்டு உட்கார்ந்து வந்தவர்தானே ராகுல்! முன்பு சி.ஏ.ஏ வன்முறையை தூண்டிவிட்ட பிரிவினைவாதிகள், தற்போது விவசாய போராட்டத்தின் பின்னால் இருக்கலாம். கடந்த 2019 தேர்தல் அறிக்கையில் இதை நடைமுறைப்படுத்துவோம் என கூறிய காங்கிரஸ் தற்போது அதை எதிர்க்கிறது என கூறியுள்ளார்.