பெண் பத்திரிகையாளரிடம் வன்முறை

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப், கதூர் சாஹிப் எம்.பி ஜஸ்பீர் சிங் திம்பா விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரிடம் ‘ரௌனுக் பஞ்சாப் டீ டி.வி’ தொலைக்காட்சியின் பெண் நிருபர் சந்தன் பிரீத் கௌர் பேட்டி எடுத்துள்ளார். அப்போது ‘விவசாயிகள் போராட்டம் குறித்த சில நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் கோபமடைந்தார் ஜஸ்பீர். இதனால், அந்த பெண் நிருபரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். கேமராவை பிடுங்கி அதில் இருந்த மெமரி கார்டை எடுத்துக்கொண்டார். ஆனால் கேமராவில் இருந்த மற்றொரு மெமரி கார்டில் இந்த சம்பவம் பதிவாகியது. இது தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பத்திரிகையாளர் சங்கம் ஜஸ்பீர் இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.