யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது

உபி.,யில் அமைதியை சீர்குலைக்க முற்படும் யாரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

உ.பி.,யில் ஹிந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி , நேற்று( அக்., 18), அவரது அலுவலகத்தில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குர்ஷித் அகம்மது உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்., மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குறை கூறியுள்ளன.

இது தொடர்பாக முதல்வர் யோகி கூறியது திவாரியை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சிலர் அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர். இவர்கள் யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.