மேற்கு வங்கத்திற்கு விடிவு

மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்றால் பா.ஜ.க அங்கு ‘லவ் ஜிகாத்’ சட்டம் கொண்டுவரும், கால்நடை கடத்தல் மையமான மேற்கு வங்கத்தில் பசு பாதுகாப்பு சட்டம்’ அமல்படுத்தப்படும். மற்ற மாநில விவசாயிகளுக்கு கிடைக்கும் விவசாய சலுகைகள் மமதா அரசால் தடுக்கப் பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அதன் நல்ல பலன்களை பெற முடியவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் அவை விவசாயி களுக்கு உடனடியாக கிடைக்க வழி கிடைக்கும் என பாஜக மூத்த தலைவரும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சருமான நரோத்தம் மிஸ்ரா தன் மேற்கு வங்க பிரச்சாரத்தின்போது  தெரிவித்தார்.