முல்லைப் பெரியாறு அணையும் அரசியலும்

தமிழக-கேரள எல்லையில்  மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையான போதிலும்  தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.. 1895 ஆம் ஆண்டு இதுஆங்கிலேபொறியாளர் பென்னிகுக் மூலம் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி , உயரம் 155 அடி ஆகும்.இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடியும்  இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணையும் கட்டப்பட்டுள்ளது.

1790 மார்ச் 6ல் சென்னை மாகாணத்தின் மதுரை மாவட்டம் உருவானது. ஏப்ரல் 5ல் முதல் மாவட்ட ஆட்சியாளராக ஏ.மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிட்டார். இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார்.

அந்த குழு அங்கு தங்கிஇருந்து  காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து திட்ட மதிப்பீட்டை  தயார் செய்தது. போதிய நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. 1807ல் மதுரை ஆட்சியாளர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். ஆனால் 1808ல் பார்வையிட்டு நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார்.1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஏற்பட்டது. இறுதியாக 1882 இல் இந்தத் திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேஜர் ஜான்பென்னிகுயிக்கிடம் அதன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதற்காக அவர் 1884 இல் தயாரித்து சமர்ப்பித்த செலவுத் திட்டமும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப்பெற்றது.

குத்தகை ஒப்பந்தம் மேற்காக ஓடி கடலில் வீணாக கலக்கும் பெரியாற்று தண்ணீரை  கிழக்காக  திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு பெரியாறு திட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு சனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு
விடப்பட்டது.

பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட இவ்வணை, முல்லையாறு , பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பெரியாறு நீர்ப்பாசனப் செயற்திட்டத்தின் இந்தியாவிற்கான  இங்கிலாந்து அரசின் செயலாளருக்குமிடையே 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது. 24 ஆண்டுகளாக திருவிதாங்கூருக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையே நடைபெற்ற முயற்சிகளுக்குப் பின்னர் அந்த குத்தகை ஒப்புதலானது.

7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அணை கட்டவும், கட்டியபின் நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளவும், மாநில செயலாளருக்கு அதிகாரமும், முழு உரிமையும், சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி அணையின் 155 அடி உயர நீர்த் தேக்கத்திற்கு 8000 ஏக்கர் நிலப்பரப்பும், அணை
கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலப்பரமும் அளிக்கப்பட்டுள்ளது. நில வரியாக ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 5 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆண்டுக்கு ₹ 40,000 க்கு முல்லை பெரியார் அணையின் முழு நீரையும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியையும் பயன்படுத்தும் உரிமையை முழுமையாக அந்த ஒப்பந்தம்
பிரித்தானிய அரசுக்கு அளித்துள்ளது.

1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூலை 1, 1949 இல் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இரண்டும் ஒன்று சேர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஜனவரி 1, 1950 இல், திருவிதாங்கூர்-கொச்சி ஒரு மாநிலமாக அங்கீகாரம் பெற்றது. 1947 இல் சென்னை மாகாணம் சென்னை மாநிலமானது.
நவம்பர் 1, 1956 இல் மலபார் மாநிலம், திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தெற்கு வட்டங்கள் நீங்கலான பகுதி, காசர்கோடு வட்டம், தெற்கு கனரா ஆகியவைகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது.பிரித்தானிய அரசும் திருவிதாங்கூர் அரசரும் செய்துகொண்ட முந்தைய ஒப்பத்தம் செல்லுபடியாகதென்றும் அது புதுப்பிக்கப்பட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு அறிவித்தது.

ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க கேரள அரசால் 1958, 1960, 1969 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. இறுதியாக 1970 இல் கேரள முதலமைச்சராக சி. அச்சுத மேனன் பொறுப்பிலிருந்தபோது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்படி, நிலவரி ஒரு ஏக்கருக்கு ₹ 30 ஆகவும், முல்லைப் பெரியார் அணை நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்திக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு ₹ 12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர்
நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.

முல்லை பெரியாறு அணை நிலத்தையும் நீரையும் தமிழ்நாடு பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆண்டுக்கு நில வரிப்பணமாக ₹ 2.5 இலட்சமும், உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சக்திக்கான உபரிவரிப்பணமாக ₹ 7.5 இலட்சமும் கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500
அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. [17] ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார். இவ்வணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் நீர்தேக்கும் அளவை மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த 2006 இல் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுத்தது. மார்ச் 18,2006 இல் தேதி கேரள சட்டமன்றத்தில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயம் செய்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கின் தீர்வை மே 7, 2014 இல் அறிவித்தது.

தீர்ப்பின் விவரம்:
மத்திய நீர்வளக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்ட மூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட
வேண்டும். 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இக்குழு அமல்படுத்த வேண்டும்.

இந்த குழுவில் தமிழகம் சார்பில் ஒருவரும் கேரளா சார்பில் ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும். இக்குழுவின் அலுவலகம் கேரளத்தில் அமைய வேண்டும்.குழுவின் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்.  அணையின் நீர்மட்டத்தை உறுதி செய்வதுடன், பருவமழை காலங்களில் அணையின் நீர்மட்டம், பாதுகாப்பு குறித்து இக்குழு கண்காணிக்கும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்குழு அனுமதி அளிக்க வேண்டும். அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் இக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அந்த உத்தரவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய 2010 பிப்ரவரியில் இந்திய உச்சநீதி மன்றத்தால் ஒரு குழு நியமிக்கப்பட உத்திரவிடப்பட்டது. [24]  இதன்பேரில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்தைத் தலைவராகவும், இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி. டி. தட்டே, இந்திய அரசின் நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி. கே. மோஹதா, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி அரு. இலக்சுமணன், கேரள
அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஐந்து பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு ஏப்ரல் 25, 2012 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அறிக்கையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

துவக்கத்தில் அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடி ஆகவும் 144 அடிக்கு மேல் வந்தவுடன் உபரி நீர் வெளியேறும் வகையில் அணையின் வடபுறம் (அணையின் மேல் மட்டத்தைவிட 40 அடி அதிக உயரமாக இருந்த குன்றினை 420 அடி நீளத்திற்கு வெட்டி) தாம்போக்கி கலிங்கு அமைக்கப்பட்டது. 1904 இல் பெரியாற்றில் அதிக வெள்ளம் வந்தபோது இக்கலிங்கு வழியாகப் போதிய நீர் வெளியேற முடியாமல் அணையின் நீர் மட்டம் 162 அடி உயர்ந்து அணைக்கு மேல் நீர் வழிந்தது. மக்கள் பீதி அடைந்ததால், 1906 இல்
குன்றினை மேலும் வெட்டி அணையின் நீர் மட்டம் 136 அடி உயர்ந்ததும் நீர் வெளியேறும் வகையில் தாம்போக்கி கலிங்கு மற்றும் 16 அடி உயரம் கொண்ட இரும்பு பலகைகள் (சட்டர்) மூடிய நிலையில் அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடியாக அமைக்கப்பட்டது.

1962 முதல் 1979 வரை இருமுறை அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்ந்தது. 35 ஆண்டுகளுக்கு பிறகு, அணையின் நீர் மட்டம் 142 அடியை, 21 நவம்பர் 2014 அன்று எட்டியது. [27] . மீண்டும் அணையின் நீர் மட்டம் 142 அடியை, 08 டிசம்பர் 2015 அன்று எட்டியது.

முல்லை பெரியாறு அணியின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் விஷயத்தில் கேரளா அரசியல்வாதிகள்  சொல்லும் அணையின் பாதுகாப்பு குறித்த அச்சம் மட்டுமே உண்மை இல்லை. அதன்பின்னணியில் அவர்களின் சுயநலமும் உள்ளது . ஏற்கனவே தமிழக அரசு இந்த அணையின் நீரை உபயோகப்படுத்தி மின்சார உற்பத்தி செய்து, பலனடைவதை பொறுக்க முடியாமல் அதே போன்றதொரு மின் நிலையத்தை இடுக்கி அணையில் ஏற்படுத்தி உள்ளது அந்த இடுக்கி அணைக்கு நீராதாரமாக முல்லை பெரியாரின் உபரி நீரை பயன்படுத்தி வந்தது அணையின் உயரம் 136 அடியாக குறைக்கப்பட்ட பின்னர் அந்த உபரி நீர் அதிக அளவுக்கு கேரளாவுக்கு சென்றது அதனை பயன்படுத்தி கேரளாவும் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் அந்த பயன்பாட்டுக்கு நெருக்கடிஏற்பட்டுள்ளது . மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அணையின் நீர் மட்டம் 136 அடியாக இருந்ததால் அணையின் நீர் மட்டம்
152 அடிக்கு செல்லும்போது  நீரில் மூழ்கும் பல பகுதிகள் கட்டாந்தரையாக இருந்தது . அதனை கேரளா அரசியல் வாதிகள் கட்சி பேதமின்றி ஆக்கிரமித்து ரிசார்ட்டுகளும் ஹோட்டல்களும் தங்குமிடங்களும்
கேளிக்கை பூங்காக்க ளும் அமைத்து கொண்டனர். அந்த இடங்கள் எல்லாம் மீண்டும் அணையின் உயரம் 152 அடிக்கு போனால் நீரில் மூழ்கிப்போய்விடும் . அதனால் அவர்களது சட்டவிரோத பிழைப்பு பறிபோவதால் கேரளா மக்களின் உணர்ச்சிகளை தூண்டி   அணை பலகீனமாக உள்ளது இடுக்கி  சுற்று வட்டார மக்களின் உயிருக்கு ஆபத்து என்று கதை கட்டி விட்டனர் . அதற்குப்பதிலாக புதிய அணையை கட்டி பராமரிக்க கேரளா தயாராக உள்ளது அதிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படும் என்றும் புதிய திட்டத்தை அறிவித்தது இதன் நோக்கம் நமக்கு தண்ணீர் தருவதல்ல மாறாக  அணையின் ஒட்டுமொத்த  உரிமையையும் அவர்கள் கையில் எடுத்து கொள்வதே . அவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்டதால் புதிய ஆணை திட்டத்துக்கு தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை.

பழைய ஆணையே பாதுகாப்பகத்தான் உள்ளது என்று நீதிமன்றத்தால்நியமனம் செய்யப்பட்ட நிபுணர் குழு பரிந்துரை செய்தது பின்னர் நீதிமன்றம் கேரளா அரசின் எதிர்ப்பை மறுத்து தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஏற்கனவே 1950களில்  புதிதாக கேரளா மாநிலம் உருவானபோது இது முந்தய ஆங்கிலேய அரசுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையிலானஒப்பந்தம் இது எங்களை கட்டுப்படுத்தாது என்று சொல்லி பிரச்சனை செய்து அணியின் மீன்பிடி உரிமையை பறித்து கொண்டது. தற்போது மீண்டும் மீண்டும் அணையின் பாதுகாப்பை சொல்லி மக்களை பயமுறுத்தி அவர்களின் அரசியல் லாபத்தை அடைய முயற்சிக்கின்றனர். என்பதே உண்மை. 1979 ல் எம் ஜி  ஆர் முதல்வராக இருந்த போதுஅணையின் பாதுகாப்பு பற்றிய பிரச்சனையை ஏற்படுத்தி அணை பலகீனம்ஆக உள்ளது அதனைபலப்படுத்தி சரிசெய்த  பின்னர் 152 அடிக்கு உயர்த்தலாம் அதுவரை 136 அடியாக குறைக்கவும்  என்று சூழ்ச்சி செய்து
யின் நீர்மட்டத்தை குறைக்க செய்தது . பின்னர் பல்வேறு காரணங்களை சொல்லி அணையின் பலகீனத்தை சரிசெய்ய பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டது.  பின்னரும் அணையின் நீர்மட்டத்தை
உரைத்த அனுமதிக்க வில்லை அதனால் வேறுவழியின்றி வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது . பல்வேறு   டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தனது சொந்த முயற்சியால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதில் கிடைத்த தீர்ப்பின் விளைவே இந்த அணையின் நீர்மட்டம் 143 அடிக்கு உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது