மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மீட்பு, நிவாரணப்பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

புயலால் பாதித்தவர்களுக்கு உதவ அதிகாரிகள், மீட்புக்குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர். இயல்பு நிலை திரும்பும் வரை தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் நிவாரணப்பணி தொடரும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.