மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி சஞ்சய் சிங் ராஜினாமா

உத்தரப்பிரதேசம் அமேதி  ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரான சஞ்சய் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, மாநிலங்களவை எம்.பி. பதவியையும் இன்று ராஜினாமா செய்தார்.  நாளை(புதன்கிழமை) முறைப்படி பாஜகவில் சஞ்சய் சிங் இணைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்திக் காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சஞ்சய் சிங் விலகினார். சஞ்சய் சிங் அளித்த  ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த தேசம் மோடியுடன் இருந்தால் நானும் அவருடன் இருப்பதே நலம். நான் நாளை பாஜகவில் முறைப்படி இணைகிறேன். நான் எனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகிவிட்டேன்.

சஞ்சய் சிங்கின் மனைவி அமிர்தா சிங்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டார். இவர் உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு தலைவராக இருந்த நிலையில் ராஜினாமா செய்தார்.